×

டெல்லி ஜந்தர் மந்தரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கமிட்ட முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் அஷ்வினி உபாத்யா உள்ளிட்ட 6 பேர் கைது..!!

டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தரில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கமிட்ட முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளர் அஷ்வினி உபாத்யா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்து படை என்ற அமைப்பை சேர்ந்த சிலர், ஞாயிற்றுக்கிழமை ஜந்தர் மந்தரில் திரண்டு மத மோதலை ஊக்குவிக்கும் வகையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து, குற்றவாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்கிய டெல்லி காவல்துறை, இந்துப் படை அமைப்பை சேர்ந்த தீபக் சிங், வினித் கிராந்தி, பிரீத் சிங், வினோத் சர்மா, தீபக் ஆகியோரை கைது செய்தார்கள். தேடப்பட்டு வந்த உச்சநீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் பாஜக செய்தி தொடர்பாளருமான அஷ்வினி உபாத்யா, கனாட் பிளேஸ் காவல் நிலையத்தில் அதிகாலை 3 மணியளவில் சரணடைந்தார். பல்வேறு குழுக்கள் இடையே பகைமையை ஏற்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : BJP ,Ashwini Upadhyay ,Islam ,Jantar Mantar ,Delhi , Delhi, Islamist, Ashwini Upadhyay, arrested
× RELATED சேலம் பாஜ நிர்வாகி மீது மாஜி பெண்...